Banner Image

இணையவழிக் கண்காட்சி

சிங்கப்பூரின் தேச நிர்மாணப் பயணத்திற்கு வழியமைத்த அரும்பொருள்களையும் கதைகளையும் சந்தியுங்கள்.

icon2

எங்களுடன் பகிர்ந்துகொள்ள உங்களிடம் ஏதாவது அரும்பொருள் அல்லது கதை இருக்கிறதா?

இங்கு சமர்ப்பியுங்கள்

சாதாரணப் பொருட்கள், அசாதாரணக் கதைகள்

அவர்களுடையதைப் போன்ற அரும்பொருள் அல்லது கதை உங்களிடம் இருக்கிறதா? இங்கு வழங்குங்கள்.

அவற்றை அனுப்பிக்கொண்டே இருங்கள்

நாங்கள் இதுவரை பெற்றுள்ள பங்களிப்புகளில் சிலவற்றைப் பாருங்கள்.

Card

Card

Card

Card

Card

திரு ஆவ் செக் ஙீ-யும் அவர் குடும்பத்தின் முதல் அடுக்குவீடு குறித்த வீவக ஆவணங்களும்

திரு ஆவும் அவரின் குடும்பமும் அவர் தேசிய சேவைக்குச் செல்லும் முன்னர் தங்களின் முதல் வீவக வீட்டில் குடிபுகுந்தனர். மூத்த மகன் என்ற முறையில், அவரும் அவரின் தாயும் கூட்டு உரிமையாளராக அவர்களின் குத்தகையில் கையெழுத்திட்டனர். தங்களுக்குப் பழக்கமான கம்போங் சூழலைவிட்டு வேறு இடத்திற்குச் செல்வது குடும்பத்திற்குப் பெரும் மாற்றமாக இருந்தது, 4-அறை வீட்டுக்கு மேம்படுத்திக்கொண்டு செல்லுவதற்கு முன்னர் நிதியியல் காரணங்களால் அவர்கள் 3-அறை வீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர். குடும்பத்தினர் தங்கள் கிளை மொழியிலேயே அதிகம் பேசியதால், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட விதிமுறைகளை விளக்க வீவக பிரதிநிதிகளை அவர்கள் பெரிதும் நம்பியிருந்னர்

Card

ஹாப்பி பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவருடன் திருவாட்டி லின் மிங் ஜூ

1950களிலிருந்து 1970-கள் வரை ஹாப்பி பள்ளியில் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றிய தமது தாய் திருவாட்டி லின் மிங் ஜூவை டாக்டர் இ டாய் நினைவுகூருகிறார். அப்பள்ளியில் நிகழ்கலைப் பாடத்தைத் தொடக்கி வைத்து வகுப்புகளில் அதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஹாப்பி வேர்ல்டு எனும் பொழுதுபோக்குக் கூடத்தில் கேபரே நடனப் பெண்களாக வேலை செய்த இரு பெண்கள் கேலாங்கில் பிறந்த பிள்ளைகளுக்குக் கல்வியூட்ட வேண்டும் என்பதற்காக அப்பள்ளியை நிறுவினர்.

Card

திரு டான் கிம் சூவும் தேசிய இரும்பு மற்றும் எஃகு ஆலை பிரைவேட் லிமிட்டெட்டிடமிருந்து அவர் பெற்ற நீண்ட காலச் சேவை விருதும்

ஜூரோங் தொழில் பேட்டையில் முதன் முதலில் திறக்கப்பட்ட தொழிற்சாலை தேசிய இரும்பு மற்றும் எஃகு ஆலை பிரைவேட் லிமிட்டெட் ஆகும். இயந்திரங்களைச் செப்பனிடும் தொழில்நுட்பராகப் பணியாற்றிய அவருக்கு அது ஆபத்தான வேலையாக இருந்தது. திரு டான் உயரமான இடங்களில் ஏற வேண்டும். வேலை இடத்தில் பல விபத்துக்களை அவர் பார்த்திருக்கிறார். அவர் தம் நுரையீரலைப் பாதுகாக்க வேலை நேரத்தில் ஈரத்துண்டின் வழி சுவாசித்தார். வேலை முடிந்ததும் அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பகுதியில் அடிக்கடி நடக்கப்போவார் அல்லது ஈஸ்ட் கோஸ்ட் லாகூனில் நீச்சலடிப்பார். தமது குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும்பொருட்டு அவர் கூடுதல்நேரம் வேலை செய்தார். வேலையிடத்தில் தாம் சாதித்தவை பற்றி அவர் பேசியதே இல்லை. இன்றுவரை அவரின் மகள்கள், அவரின் நெஞ்சுரம் மற்றும் அடக்கத்திற்காகவும் இத்தனை ஆண்டுகளாக அவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டதற்காகவும் அவரைப் போற்றி மதிக்கின்றனர்.

Card

திருவாட்டி ஜைனாபும் அவரின் பற்றவைக்கும் கருவியும்

16 வயதாக இருக்கும்போதே திருவாட்டி ஜைனாப் ரோலாயில் சேர்ந்துவிட்டார். காமிரா பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்படுவதற்கு முன்னர் அவற்றின் தரத்தை அவர் உறுதி செய்தார். சிங்கப்பூரின் பொருளாதாரம் வளர்ந்து மாறிவரும் வேளையில், Asahi, Team and Connor Peripherals போன்ற நிறுவனங்களுக்கு மாறிச்செல்ல ரோலாயில் பெற்ற அனுபவம் அவருக்கு மிகவும் பயன்மிக்கதாக இருந்தது. அங்குதான் அவர் வேலை செய்துகொண்டே பற்றவைப்புப் பணியையும் கற்றுக்கொண்டார்.

அறிமுகம்

அரும்பொருள்கள் மூலம் கூறப்படும் நமது தேச நிர்மாண ஆண்டுகள்

1950களிலிருந்து 1970கள் வரை சிங்கப்பூரின் உருமாற்றத்திற்கான காலம்

நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் பலகலாச்சார சிங்கப்பூரைக் கற்பனை செய்தனர். அவர்கள் பெரிதாகக் கனவு கண்டனர். துணிவுடன் சவால்களை வாய்ப்புகளாக மாற்றினர். நேர்மைக்கும் தன்னலமற்ற சேவைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர்,

வாழ்க்கையின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களும் நமது தலைவர்களுக்குப் பின்னால் ஒன்றுதிரண்டு, மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு நம் அடிப்படை விழுமியங்களுக்கு ஏற்பத் தாங்களும் வாழ்ந்திராவிட்டால், நமது புதிய தேசம் வளர்ச்சி கண்டிராது.

இந்தக் கண்காட்சியில் நீங்கள் பார்க்கும் அரும்பொருள்கள், இத்தகைய முதல் தலைமுறைக் கதைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மீள்திறன், சமுதாய உணர்வு போன்ற விழுமியங்கள் எப்படி கொவிட்-19 போன்ற நம் தலைமுறைச் சவால்களுக்குத் தொடர்ந்து பயனுள்ளவையாக உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றன.

இந்த விழுமியங்களின் உணர்வைப் படம்பிடித்துக்காட்டும் நாம் பாடும் தேசிய தின பாடல்களைக் கேட்கத் தவறாதீர்கள்.

அத்தியாயம் 1

சிங்கப்பூருக்கு நம் பங்கை ஆற்றுதல்

நமது தேச நிர்மாண ஆண்டுகள் எண்ணிலடங்காச் சுயநலமற்ற செயல்களையும் தியாகங்களையும் கண்டன. மற்ற பிரிவினர்களுடன், மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலாளர்கள் முதலியோரும் ‘கோத்தோங் ரோயோங்’ எனும் சமூக ஒத்துழைப்பு உணர்வை வெளிக்காட்டினர். நகரைச் சுத்தம் செய்தல், சாலைகள் அமைத்தல், கட்டட நிதிகளுக்குப் பங்களித்தல் போன்றவற்றுக்கான பல்வேறு அழைப்புகளுக்கு ஆதரவளித்தனர்.

கொவிட்-19​க்கு எதிரான நமது போராட்டத்தில் இந்த சமுதாய உணர்வும் ஒற்றுமையும் இன்றும் நம்மோடு உள்ளன. பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றும் தனிநபர் செயல்கள், சிரமங்களுக்கிடையேயும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றும் அத்தியாவசியச் சேவைகள், மற்றவர்களுக்கு ஆதரவளிக்க அடித்தளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என அனைத்திலும் நாம் அதனைப் பார்க்கிறோம்.

Card

சிங்கப்பூரைத் தற்காத்தல்

புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடு என்னும் முறையில் சிங்கப்பூர் தன் தற்காப்பை விரைவாகக் கட்டி எழுப்பும் நெருக்குதலை எதிர்கொண்டபோது, தொடக்ககால சிங்கப்பூரர்கள் துணிவுடன் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வந்தனர்.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

சமுதாயத்தின் மீது அக்கறைகாட்டுதல்

சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்கும் இயக்கம், சமூக ஒத்துழைப்புத் திட்டம் போன்றவை மக்கள் தங்கள் சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஒன்றிணைந்த வழிமுறைகளில் சில.

முழுக் கதையைப் பாருங்கள்

அத்தியாயம் 2

ஒரு மக்கள், ஒரு தேசம், ஒரு சிங்கப்பூர்

1959ல் தன்னாட்சி பெற்றதிலிருந்து, பல கலாச்சாரக் கொள்கை சிங்கப்பூரின் அடித்தளமாக இருப்பதுடன், சுதந்திரம் பெறுவதற்கு முந்திய சமூகப் பதற்றங்கள் மிகுந்த காலத்தைக் கடந்து வரவும் உதவியது.

வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்த ஒரே மக்களாக ஒன்றுபட்டு நிற்க நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரர்களை ஒன்று திரட்டினர்.

Card

நமது தேசத்தை வரையறுத்தல்

நமது தேசியச் சின்னங்களில் முதலாவது 1959இல் அறிமுகம் செய்யப்பட்டது. அவை ஒரே சிங்கப்பூராக நாம் இருப்பதற்கான விழுமியங்களை நமக்கு நினைவுபடுத்தி நம்மை ஒன்றிணைக்கின்றன.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

இன நல்லிணக்கத்தை வளர்த்தல்

1960களின் தொடக்கத்தில் மூண்ட இனக் கலவரங்களின்போது, பலகலாச்சாரத் தன்மையை ஆதரிக்கவும் மக்களை ஒன்று திரட்டவும் சிங்கப்பூர் நமது முதல் தலைமுறைத் தலைவர்களையும் சமூகத்தையும் நம்பியிருந்தது.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

எல்லோருக்குமான கலாச்சாரக் கலைநிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் நம் பன்மைத் தன்மையைப் போற்றுவதை ஊக்குவிக்கவும் கலைநிகழ்ச்சிகள் ஒரு வழிமுறையாக அமைந்தன.

முழுக் கதையைப் பாருங்கள்

அத்தியாயம் 3

சிங்கப்பூர் எப்படிச் சிறந்து ​விளங்க முடியும் என்பதை நாம்
உலகிற்குக் காட்டப்போகிறோம்

நமது பொருளாதாரத்தை உருமாற்றி, வர்த்தகத்திற்கு சிங்கப்பூர் திறந்திருக்கிறது என்பதை உலகிற்குக் காட்டும் குறிக்கோள் நம் முதல் தலைமுறைத் தலைவர்களிடம் இருந்தது. சிங்கப்பூர் குறுகிய காலத்திற்குள் இந்தக் கனவை நனவாக்க முடியும் என்று அவர்கள் நம்பினர்.சிங்கப்பூரைத் தொழில்மயமாக்க வேண்டும் என்று கூறுவது எளிது ஆனால் செயல்படுத்துதல் சிரமம். இதனை அடைவதற்கு நமது முதல் தலைமுறைத் தலைவர்களும் மக்களும் துணிவும் புத்தாக்கமும் திறந்த மனப்போக்கும் மிக்கவர்களாக இருக்க வேண்டியிருந்தது. ஒரு நாடு என்ற முறையில் இது நமது அடித்தளமாக அமைந்ததுடன் இன்று நாம் மாற்றங்களுக்கு ஏற்பச் செயற்படும் விதத்தைத் தொடர்ந்து வடிவமைக்கிறது.
Card

கோவின் மடமை

கோவின் மடமை என்று கருதப்பட்ட ஒன்று சிங்கப்பூரின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வெற்றிகரமான முயற்சியாக அமைந்தது.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

கப்பல்துறையின் எதிர்காலம்

1967ல் பிரிட்டிஷ் இராணுவம் மீட்டுக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு சிங்கப்பூரின் தற்காப்புக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் கூட ஒரு சவாலாக அமைந்தது. சிங்கப்பூர் விரைவாக மாற வேண்டியதிருந்தது. நமது கப்பல்துறை முன்பைக் காட்டிலும் மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

பெருமையுடன் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது

பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தொழிற்கூடங்களை இங்கு நிறுவிச் செயற்படத் தொடங்கிய பின், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் விரைவில் மக்கள் நன்கறிந்த பொருள்களானதோடு அவற்றின் தரத்திற்கும் பெயர் பெற்றன.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

நமது கதவுகளை உலகிற்குத் திறந்துவிடல்

சிங்கப்பூர் முதலீடுகளைச் செயலூக்கத்துடன் நாடிய அதே வேளையில், மாசுக் கட்டுப்பாட்டில் நமது தலைவர்கள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.

முழுக் கதையைப் பாருங்கள்

அத்தியாயம் 4

வருங்காலம் இன்றே இங்கு

வீவக வீடுகள் இல்லாவிட்டால் நமது அக்கம்பக்கங்கள் எப்படித் தோற்றமளிக்கும்? சாலையோர மரங்கள் இல்லாவிட்டால், இந்தப் பூந்தோட்ட நகரம் எப்படி இருக்கும்?

நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரின் நிலவனப்பு விவரங்களில் அணுக்கமான கவனத்தைச் செலுத்தி, இன்று நாம் அனுபவிக்கும் பழக்கப்பட்ட காட்சிகளில் பலவற்றை உருவாக்க சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து பணியாற்றினர். முன்னெப்போதும் காணாத அளவில் வீட்டுடைமைத் திட்டத்தை நிறைவேற்ற, நமது தேசத்தின் தொடக்ககால வளர்ச்சிக்குத் துணிவுமிக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டன. இவை அனைத்தும் சிங்கப்பூரை ஒரு பூந்தோட்ட நகராக்கும் கனவை நனவாக்க உதவின. எதிர்கால நகரங்களைச் சிங்கப்பூருக்கு இன்றே கொண்டுவந்தன.

Card

மக்களுக்கான இல்லம்

சுதந்திர சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டம் பெரும் இலக்குகளைக் கொண்டிருந்தது. வாழ்வதற்கான புதிய வழிவகைகளுக்குப் பலர் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் புது நகரங்களில் வீடுகளைப் பெற்றனர்.

முழுக் கதையைப் பாருங்கள்
Card

பூந்தோட்டத்தில் ஒரு நகரமாக சிங்கப்பூரை மாற்றுதல்

நமது இயற்கைச் சூழலைப் பாதுகாத்தலும் சிங்கப்பூரைப் பசுமையாக்குதலும் எப்போதுமே, நமது தொடக்ககால நாட்டு நிர்மாண ஆண்டுகளில் கூட, ஒரு முன்னுரிமையாக இருந்துள்ளது.

முழுக் கதையைப் பாருங்கள்

உங்கள் அரும்பொருட்களாலும் கதைகளாலும்
எங்கள் கண்காட்சியை வளப்படுத்துங்கள்

எங்களின் சேகரிப்பிற்கு நீங்கள் எப்படிப் பங்களிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்